Tuesday, March 20, 2018

வெண்முரசுக்குள் நுழைதல்



வணக்கம்,

இன்று தங்களை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் சந்தித்தேன். இதுவே முதல் முறை,  நான் கேள்விப்பட்ட, நண்பர்களால்  நானே உருவாக்கி கொண்ட  ஜெயமோகன் போல அல்லாமல் என் பெயர் கூட கேட்காமல் என் கேள்விகளுக்கு நிதானமாக பதில் தந்தமைக்கு நன்றி.

கொற்றவை எப்படி வெண்முரசில் கொண்டுவந்தீர்கள், கதையில் வரும் அனைத்து பெண்களின் பெயர்களும் ஐ என முடிகிறது,  உலகின் பொதுவான வேதம், பிறகு பாண்டுவை பற்றி காலையில் கேட்டது நானே. என் பெயர் ராஜா. தங்களிடம் வெண்முரசு குறித்து கேட்க, பேச, உரையாட நான் ஆவலாக உள்ளேன்.

இன்று காலையில் நடந்த சிறு உரையாடலியே  பெரும் மகிழ்ச்சி கொண்டேன் நான்.வெண்முரசு என்மீது ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம்.இதில் வரும்  உரையாடல்கள் என் வாழ்வின் பல இருக்கமான பக்கங்களை தளர்த்தி இருக்கிறது.

அர்ஜுனன் பாசுபதம் பெறுவது என் வாழ்வில் என்றுமே மறக்காத பக்கங்கள்.

மீண்டும் தங்களிடம் நிறைய பேசவேண்டும் என் ஆவல். தாங்கள் வாய்ப்பு கொடுத்தால் தங்களை வீட்டில் வந்து சந்திக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் என்னை அழைப்பீர்கள் என நம்புகிறேன்.

குறிப்பு: நான் தங்களின் வெண்முரசு மட்டுமே வாசித்து இருக்கிறேன். கடந்த செப்டெம்பர் தொடங்கி வருட இறுதிக்குள் இரவு பகல் பாராது வாசித்து முடித்தேன். 

ராஜா