Friday, March 30, 2018

அர்ஜுனனும் கர்ணனும்




ஜெ

கர்ணன் கேட்கும் கேள்விகள் அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கைப்பின்னணியில் இருந்து வருபவை. அவனுடைய வாழ்க்கையைத்தான் அவன் கேட்கிறான். ஆனால் அது அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன் கேட்பதைவிட கூர்மையாக அதே தரப்பை முன்வைப்பதாக இருக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது.
கர்ணன் தத்துவத்தேடலே இல்லாதவனாகத்தான் காட்டப்பட்டிருக்கிறான். அவன் கேட்பது நடைமுறை வாழ்க்கையிலே பூதாகரமான நின்றிருக்கும் அவனுடைய சிக்கலுக்கான கேள்வி. அதேசமயம் அது பிறப்பால் கட்டுண்டிருக்கும் அனைவருக்குமான கேள்வியாகவும் உள்ளது

செல்வன்