Saturday, December 9, 2017

மணம்



ஜெ


இன்று என் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாள். என் எட்டாண்டு உறவு இன்றோடு நீங்குகிறது. வீட்டுக்குவந்து சோர்ந்து இருந்தேன். அம்மா டீபோட்டு தந்தார்கள். கைபோன போக்கில் வெண்முரசை எடுத்து வாசித்தேன். இந்தவரி கிடைத்தது. வெண்முகில்நகரத்தில்.


இத்தகைய உணர்ச்சிகளுக்கு தூமப்புகையின் வாழ்நாள்தான். விழிக்கு சற்றுநேரம், மூக்குக்கு மேலும் சற்றுநேரம், நெஞ்சில் மேலும் சற்றுநேரம்காற்று எட்டுத்திசைகளிலிருந்தும் சுழன்று வீசிக்கொண்டே இருக்கிறது.”

மெய்சிலிர்த்துவிட்டேன் ஜெ. ஒரு தெய்வ வாக்குபோல இருந்தது. இலக்கியம் இப்படி வாழ்க்கைக்கு வழித்துணையாகும் என்றெல்லாம் நாலைந்துநாள்முன்புவரைக்கூட நினைத்ததில்லை. வணங்குகிறேன்


கே