Saturday, December 23, 2017

பூரிசிரவஸ்



அன்புள்ள ஜெ,

நீண்ட இடைவேளைக்குப்பின் பூரிசிரவஸைச் சந்திப்பது நிறைவளித்தது. மகாபாரதத்தில் இதுவரை வந்த எல்லா கதாபாத்திரங்களும் வீரர்கள். என்ன செய்யப்போகிறோம் என்பதைப்பற்றிய குழப்பமே இல்லாதவர்கள். பூரிசிரவஸ் குழப்பங்களும் தடுமாற்றங்களும் கொண்ட சாதாரணமான மனிதன். அடிப்படையில் கருணையும் காதலும் கொண்டவன். அவன் விதி அவனை அலைக்கழிக்கிறது

பூரிசிரவஸ் தேவிகையைச் சந்திக்கும் இடமும், அதிலுள்ள மனக்கொந்தளிப்புகளும் தயக்கங்களும் தங்களுக்குத்தாங்களே போட்டுக்கொள்ளும் சூழ்ச்சிகளும் அற்புதமனாவை. ஒரு பெரிய ரொமாண்டிக் காவியத்தை வாசிக்கும் அனுபவம் ஏற்பட்டது அந்தப்பகுதிகளில்

இழந்தகாதலைப்போல இனிமையானது வேறு இல்லை. அந்தத்துக்கம் நஞ்சுமாதிரி. ஆனாலும் இனிமையானது.


ஜெயராமன்