Saturday, December 9, 2017

மந்தனும் மாமலரும்.






பொதுவாக வாசல் பக்கம் வரும் வழக்கமில்லை. எப்போதேனும்  எட்டிப்பார்த்தால், கொல்லைப்புறத்தில் அனைத்து பாத்திரங்களும் உருட்டப்பட்டுவிட்டன என்றும், ஒன்றில் கூட தண்ணீர் இல்லை என்றும் பொருள்.

மாமலர் செம்பதிப்புடன் வாசலில் அமர்ந்திருந்தேன், கொஞ்சமும் சத்தமெழுப்பாமல் வந்தமர்ந்திருந்ததை பார்த்தவுடன் பதட்டத்தோடு
எழுந்துவிட்டேன். மிரட்டுவதற்கு வழக்கமாய் பயன்படுத்தும் மூங்கில் கம்போ தொலைவில். 

ஒரு பாதுகாப்புக்கு மாமலர் புத்தகத்தை நிமிர்த்தி வைத்துவிட்டு, மூங்கில்
கம்பை சென்று எடுத்துவருவதற்குள் தானாகவே கிளம்பிவிட்டார்...

யோகேஸ்வரன் ராமநாதன்