Thursday, December 21, 2017

ரத்தநிலம்



அன்புள்ள ஜெ

ரத்தநிலம் அதன் முழுவீச்சுடன் அறிமுகமாகிறது. கரையான்களை கொண்டுசென்று பதியனிடமுடியும் என்னும் இடம் குருசேத்திரம் என்ரால் என்ன என்பதைக் காட்டுகிறது. குருசேத்திரம் ஒரு மிகப்பெரிய மரணக்களம் மட்டுமல்ல வஞ்சக்களம்கூட. வஞ்சத்தைத்தான் அப்படிப் பயிரிடமுடியும். இரும்பையே உண்ணும் வஞ்சம். கண்ணுக்குத்தெரியாமல் வீட்டையும் வயலையும் அழித்துவிடும் ஆற்றல்கொண்டது அது. அந்த ஒரு வரி வழியாக அந்தமண் என்ன என்பதைக் காட்டிவிட்டீர்கள். குருசேத்திரம் பற்றி நிறைய உவமைகள் வந்திருந்தாலும் அதுதான் உச்சகட்டம். அது ஒரு நோய் போல இந்தியமண்ணிலே இருந்துகொண்டே இருக்கிறது


பிரபாகர்