Thursday, December 21, 2017

சிதல்



ஜெ

எங்கள் பூர்வீகநிலம் கோயில்பட்டிப்பக்கம். இடைச்செவல் பகுதியில் உள்ள கரிசல் எங்களூரில் இல்லை. சிவந்த நிலம். முள்மட்டும்தான். ஆனால் சிதல் கண்டபடி வளரும். எங்கள் வீட்டை ஒருவருடம் பூட்டிவிட்டு திரும்பிப்போய் பார்த்தபோது வெறும் குப்பைமேடுதான் இருந்தது. ரத்தம் உண்ணும் சிதல் என்று நினைத்துக்கொண்டேன். சிதலின் மணம் ஓரளவு ரத்ததின் மணமேதான். அல்லது சீழ்மணம். புண்ணின் மணம். எங்களூரின் நினைவுகளை எழுப்பியது அந்த அத்தியாயம்

வேணுகோபால்