Tuesday, March 3, 2015

அன்னையின் மைந்தன்



ஜெ

பாண்டவர்கள் ஐவரிலும் சகதேவன் தான் நிதானமாகவும் இதமாகவும் இருக்கிறான். அவனுடைய குணச்சித்திரம் இதுவரை துலங்கிவரவில்லை. ஆகவே அவன் மெல்லமெல்ல வெளிப்படத்தொடங்கியபோது ஒரு பெரிய பதற்றம் வந்தது. இந்த மோகினி அவனைக் கிழித்துச் சாப்பிட்டுவிடுவாள் என்று நினைத்துப்பயந்தேன்

ஆனால் அவனுடைய விவேகமும் நிதானமும் காணப்பட்டப்போது அப்படி எளிதில் அவனை வெல்லமுடியாது என்று நினைத்துக்கொண்டேன். கடைசியில் அவன் லேகியத்தைத் தின்னும் காட்சியில் சிரித்தேன். அவன் தன்னுடைய குழந்தைத்தன்மையாலேயே அவளை ஜெயித்துவிட்டான். அவள் இனிமேல் அவனுக்குமட்டுமே அடிமையாக இருப்பாள் இல்லையா?

நான்கு அசகாயசூரர்கள் ஜெயிக்காத இடத்தில் இப்படி ஒரு குழந்தை ஜெயிப்பது அழகான கவித்துவம் ஜெ

சித்ரா