Sunday, May 27, 2018

வண்ணக்கடல்



பெருமதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் ஸார் அவர்களுக்கு, சென்னையிலிருந்து கணேசலிங்கம் அனேக வணக்கங்களுடன் எழுதிக்கொண்டது.

இன்றுதான் தங்களின் "வண்ணக்கடல்" வாசித்து முடித்தேன்.இளநாகனுடன் பயணங்களில் வரும் சவாரஸ்யமான பாணர்களின் வாயிலாக, அஸ்தினாபுரியின் அரசகுலத்தவர் பற்றி மட்டுமின்றி, உப கதைகள் வழியாக அசுர குலம் பற்றியும் அறிய முடிந்தது.
 
துரோணர்,ஏகலவ்யன்,கர்ணன் போன்றரைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

நான்காவது பாகமான "நீலம்" வாசிக்கத் தொடங்குமுன் தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும்,இந்த மகத்தான பணிக்காக பல கோடி நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்பினேன்.

எல்லாம் வல்ல இறைவன் எப்போதும் தங்களுடனிருந்து நடத்த வேண்டுகிறேன்.

என்றென்றும் அன்புடன்,

செ.கணேசலிங்கம்