Friday, May 11, 2018

திரௌபதியின் பக்தி



ஜெ

திரௌபதி துகிலுரிந்த சந்தர்ப்பம் பற்றியும் கிருஷ்ணனைப்பற்றியும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்பது ஆச்சரியமானதாகத் தோன்றியது. அவள் முழுசாகச் சரணாகதி அடைந்த இடம் அது என்று சொல்வார்கள். அங்கே ஏதேனும் வடிவில் அந்த இடம் பேசப்படும் என நினைத்தேன். ஆனால் அழகியலுக்கு இடம் கொடுத்து கொண்டுசென்றிருந்தீர்கள்

ஸ்ரீனிவாசன்