Thursday, May 3, 2018

ஆற்றுவோள்



குலமகள் இல்லம் அமைத்துக் காப்பதுபோல் ஆற்றுவோள் ககனத்தை அமைத்து காக்கிறாள்  என்ற வரி அருமையானது. சக்தி என்ற சொல்லுக்கு ஆற்றுவோள் என்ற மொழியாக்கமே அற்புதம். குலமகள் வீட்டை அடுக்கி வைக்கிறாள். அதில் சமைக்கிறாள். அமைத்துக்காக்கும் சக்தியும் அதுபோலத்தான்

முதல்முழுமை அவளுக்குள் இன்மையென திகழமுடியாது. எழுக எனும் ஆணைகொண்ட கருவென்றே அமையமுடியும் என்று திரௌபதியிடம் நாகினி சொல்கிறாள். இந்த இடம் கீதைமேல் வைக்கப்பட்ட மிகமிக வலுவான விமர்சனம்

தேவி