Sunday, September 2, 2018

முழுமையான வாசிப்புகள்




ஜெ

இப்போது தளத்தில் வெளியாகிக்கொண்டிருக்கும் கட்டுரைகள் ஒட்டுமொத்தமான பார்வையை அளிக்கின்றன. நாம் வாசித்தவற்றை ஒரே சமயம் நினைவுகூர உதவுகின்றன. தாமரைக்கண்ணன் பாண்டிச்சேரி, அருணாச்சலம் மகாராஜன் ஆகியோரின் கட்டுரைகள் மிக முக்கியமானவை. அவை அளிக்கும் பார்வை நாவல்களை மேலும் கூர்ந்து வாசிக்கவைக்கிறது. ராஜகோபாலன் முன்பு எழுதிய ஒரு கட்டுரையும் இவ்வாறே முக்கியமானதாகத் தெரிகிறது. இந்தவகையான கட்டுரைகள் இந்நாவல் முடிந்தபின்னர்தான் அனேகமாக வெளிவரும் என்ற எண்ணம் எனக்கிருந்தது.

இந்நாவல்கள் முடிந்தபின்னாடி இந்தக் குறிப்புகள் கட்டுரைகள் கடிதங்கள் ஆகியவற்றை நாவல்வாரியாகத் தொகுத்தால் நாவல் படிக்கிறவர்களுக்கு உதவியாக இருக்குமென தோன்றுகிறது

செல்வக்குமார்

கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்


வெண்முரசு வாசிப்பு முறை - ராஜகோபாலன்