Monday, November 26, 2018

அகழ்பவன்


அன்புள்ள ஜெ


போரின் குரூரத்தைக் காணக்காண அனைத்துமே கிருஷ்ணலீலை என்ற எண்ணத்தை நானே வலுக்கட்டாயமாக நிலைநிறுத்திக்கொள்கிறேன். ஆனாலும் என்னுடைய சின்ன அறிவுக்கு இதெல்லாம் எட்டவில்லை. இவ்வளவு அழிவு ஏன் என்றே என் மனம் ஏங்குகிறது. நீர்கழ்ந்து மண் கண்டவன் அறிவான் அனைத்தும் என்று சொல்லிக்கொள்கிறேன். இந்த குரூரமான நிகழ்வுகள் உலகவரலாற்றில் இல்லாத காலமே இல்லை. இன்றைக்கும் மத்திய ஆசியாவும் ஆப்ரிக்காவும் அழிந்துகொண்டிருக்கின்றன. இந்த அலைகள் நடுவேதான் அமுதை எழுப்புகிறான் அவன்

ஸ்ரீனிவாஸ்