Thursday, November 22, 2018

அமங்கலம் 2



ஜெ

போர்க்களத்தில் வீரர்கள் அமங்கலமாக ஆபாசப்பாடல்களைப் பாடுவதைப்பற்றி ஒரு வாசகர் எழுதியிருந்தார். அன்றைக்கு அவர்கள் ஒப்புக்குக்கூட வெற்றிக்கூச்சல் எழுப்பவில்லை. செத்த சவங்களாகவே திரும்புகிறார்கள். ஆகவே மெல்லமெல்ல சிரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆபாசம் இல்லாமல் சிரிப்பே இல்லை

அதில் என்ன கவனிக்கவேண்டும் என்றால் அவர்கள் போருக்குவந்ததே மூதாதையர் பெருமைபேசியபடித்தான். திரும்பத்திரும்ப குலம், மூதாதை என்ற இரண்டு அடையாளங்களால்தான் அவர்களை போருக்குக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் இங்கே கிண்டல்செய்து இழிவுசெய்வது குலத்தையும் மூதாதையரையும்தான். மூதாதையர் குலம் இரண்டுமே அன்னைகள் வழியாக வருவதுதானே?அன்னையரின் கற்பை இழிவுசெய்வது அவ்விரண்டையும் அர்த்தமில்லாமல் ஆக்குவதற்காகத்தான்


ராஜசேகர்