Tuesday, November 13, 2018

பனிமூட்டம்



அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா? 

பின்தொடரும் நிழலின் குரல் முடித்து வெகுநாட்களாகியும் முழுமையாக வெளிவர இயலவில்லை. மறுபறம் திசைதேர் வெள்ளம் ஏற்படுத்தும் பெருவஞ்சங்களின் பெருங்கனவுகளின் பொருளின்மை வேறு.  எழுதியே உள்ளிருப்பதை அறிய முடிகிறது. எனில் கடிதங்கள் எழுத முடியாத வகையில் மனம் ஏங்கிக் கிடந்தது.    

மனதை புறவயமாக அலுவல் பணியில் மூழ்கடித்து மீள முயன்றேன், ஓரளவு முடிந்தது. எனில் செயலோய்ந்து அமரும் முதல் நிமிடம் மனம் தேம்புவது தொடர்ந்தது.

இந்நிலையில் தீபாவளிக்கு பெங்களூர் வரும் திட்டம், அம்மாவையும் இம்முறை பெங்களூர் அழைத்து வந்தேன்.  நேற்று கிளம்பி டேராடூன் வந்திருக்கிறேன். இன்னும் இரு நாட்கள் இங்கே இருந்துவிட்டுத் திரும்புவதாக எண்ணம்.  மலைகளூடாக உலவிச் செல்வதன்றி ஊர்சுற்றும் திட்டங்கள் ஏதுமில்லை. 

பனிமூட்டம் சூழ்ந்திருக்கிறது. ஒளிவரக் காத்திருக்கிறேன்.

மிக்க அன்புடன்,
சுபா