Friday, November 30, 2018

பீஷ்மரின் படுகளம்




அன்புள்ள ஜெ

பீஷ்மரின் படுகளம் மனதை என்னவோ செய்கிறது. இரண்டுநாட்களாகியும் அதிலிருந்து வெளியே வரவேமுடியவில்லை. இந்த போர் ஆரம்பித்தபின் பலர் இறந்திருக்கிறர்கள். ஆனால் ஆரம்பம் முதலே வந்துகொண்டிருக்கும் பெரிய கதாபாத்திரம் என்பது பீஷ்மர்தான். ஆகவே அவருடைய இறப்பு மிகவும் சங்கடப்படுத்துகிறது.

அதிலும் அவ்வளவு பெரியவர். அவ்வளவு ஞானம் கொண்டவரை கொஞ்சம் மரியாதையாகக் கொன்றிருக்கலாமோ. அவரை அம்புகள் புரட்டிப்புரட்டி அடிக்கின்றன. அதுதான் நிகழ்ந்திருக்கும். ஏனென்றால் அவர் உடலெங்கும் அம்புகள் படுவதென்றால் வேறுவழியே இல்லை. அந்தக்காட்சி கண்ணீரை வரவழைத்தது

ஆர்.சத்யா