Thursday, November 1, 2018

விந்தனும் அனுவிந்தனும்



அன்புள்ள ஜெ

வெண்முரசில் வந்துகொண்டே இருக்கும் இரட்டையர்களில் ஒருவர் விந்தன், அனுவிந்தன். அவர்கள் வழக்கமான இரட்டையர்கள். ஆனால் ஒரு நுட்பமான கதை வழியாக அந்த வாழ்க்கை வேறுபடுகிறது,. விந்தன் அனுவிந்தனில் விந்தனே மூத்தவர் என முடிவெடுப்பது அன்னைதான். எதைக்கொண்டு அந்த முடிவை எடுத்தார்கள் என்பதும் அவளுக்கு மட்டும்தான் தெரியும். அவள் எடுத்த அந்த முடிவை திரும்பச்சென்று சரிசெய்வதுதான் விந்தனின் வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. மூத்தவர் என்று சொல்லிவிட்டதனாலேயே அவர் மூத்தவராக ஆகிவிட்டார். மூத்தவராக நடந்துகொள்கிறார். ஆனால் உண்மையில் மூத்தவரல்ல என்று தெரியும். ஆகவே அவர் ஐயம் கொள்கிறார். தம்பியைக்கொல்லக்கூட நினைக்கிறார்.

அம்மா அளித்த அனைத்தையும் விட்டுவிட்டு தெய்வம் அளித்த இடத்துக்கே திரும்பிச்செல்லுங்கள் என்றுதான் அவருடைய அமைச்சர் சொல்கிறார். அவர் திரும்பச்செல்கிறார். அந்த முடிவு அவர் வாழ்க்கையை காப்பாற்றுகிறது. அந்த அம்மா நல்லது நினைத்துச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவள் தன் மைந்தர்களின் வாழ்க்கையை முழுமையாகவே அழிக்கவிருந்தாள். நல்லவேளையாக அப்படி நிகழாமல் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொண்டார்கள்.

ராஜசேகர்