Saturday, November 10, 2018

தெய்வங்களின் போர்




அன்புள்ள ஜெ

சஞ்சயன் காணும் அந்தப்போர்க்களக் காட்சி இதுவரை வந்த குருக்ஷேத்திரத்தின் அர்த்தத்தையே தத்துவார்த்தமாக மாற்றிவிட்டது. இதுவரை அது அதிகாரப்போர், வாரிசுப்போர், ஆணவப்போர், தத்துவங்களின் மோதலாகவே இருந்தது. இப்போது அது இந்த பூமி முழுக்க ஒவ்வொரு அணுவிலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாபெரும் போரின் ஒரு துளி என்ற உணர்வு வந்துவிட்டது. குருஷேத்ரத்தில் எல்லா தெய்வங்களும் போரில் இருக்கின்றன. காக்கும் தெய்வங்களும் அழிக்கும் தெய்வங்களும் போரிட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தப்போர் ஏற்கனவே திருதாவால் கனவில் கானப்பட்டது. அதை மேலும் பேருருவில் திருதாவுக்கே சஞ்சயன் சொல்லிக்கொண்டிருக்கிறான். சஞ்சயன் போருக்குள் விழுந்துவிட்டான். போரை அவனால் அவனுக்குள் இருந்தே எடுக்கமுடிகிறது

ராஜசேகர்