Sunday, July 16, 2017

அலையடித்தல்



ஜெ

வெண்முரசின் நீர்க்கோலப்பகுதி மிக அபூர்வமான ஒன்று. நீர்க்கோலம் என்ற தலைப்பே இப்போதுதான் புரிகிறது. நீர்ப்பாவை போல அத்தனை பேரும் அலையடிக்கிறார்கள். பாண்டவர்கள் உருமாற்றம் அடைந்ததைப்பற்றித்தான் இந்தக்கதை பேசுகிறது என நினைத்தேன். ஒவ்வொருவரும் உள்ளே ஒவ்வொருமுறையில் உருமாற்றம் அடைவதைப்பற்றி உள்ளும் புறமுமாக அலையடிப்பதைப்பற்றித்தான் பேசுகிறது என புரிந்தது. இந்தப் பகுதி இதுவரை வந்த பகுதிகளுக்கே வேறு அர்த்தங்களை அளித்துவிட்டது

சாரங்கன்