Sunday, July 30, 2017

விதி






அன்புள்ள ஜெமோ
நளன் தமயந்தியை விட்டுவிட்டுச் சென்றான் என்று மட்டுமே அறிந்திருக்கிறேன். கலி உருவாக்கிய புத்திமயக்கத்தால் அப்படிச்செய்தான் என்றும் கேட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு இத்தனை விரிவான ஒரு விளக்கமிருக்கும் என எதிர்பார்க்கவில்லை. இருவர் சொல்வதும் சரியாகவே இருக்கிறது. இருவருமே தங்கள் அறத்தின் அடிப்படையில் நின்றுபேசுகிறார்கள். நடந்ததையெல்லாம் விதி என்று மட்டும்தான் சொல்லமுடியும் என நினைக்கிறேன்

சண்முகம்