Wednesday, July 12, 2017

பேறு



அன்புள்ள ஜெ

நீர்கோலத்தின் ஒவ்வொரு அத்யாயமும் என்னுள் ஏற்படுத்தும்
அதிர்வுகளை வார்த்தைகளாக்கவும்,தர்க
 ஒழுங்குடன் தொகுத்து சொல்லவும் எனக்கு திறனில்லை.

எதுவும் சொல்லாமல் இருக்கவும் 
முடியவில்லை.

நீங்கள் எனக்காக எழுதியது போல
சில நேரமும்,
என்னருகில் அமர்ந்து மெல்லொலியில் விவரிப்பது போலவும் உணர்கிறேன்.

என்னுடய எழுத்தாளர் நீங்கள்தான். 

உங்கள் வாசகன் என்பதும், உங்களை நேர்முகமாய் அறிவேன் என்பதும் பெரும் பேறு எனக்கு.

அன்புடன்

மு.கதிர் முருகன்
கோவை