Friday, March 1, 2019

சாயல்




அன்புள்ள ஜெ

வெண்முரசில் பூரிசிரவசின் சாவு என்னை கலங்கச்செய்தது. நீண்டநாட்களுக்கு முன் வாழ்விலே ஒருமுறை என்ற சிறிய நூலில் நீங்கள் ஒரு நிகழ்ச்சியை எழுதியிருந்தீர்கள். அதில் உங்கள் உயிர்நண்பன் ராதாகிருஷ்ணன் தற்கொலைசெய்துகொண்டதும் அவன் ஆசிட் குடித்து வலிப்பு வந்து இறந்ததனால் அவன் உடலில் ஆண்குறி எழுந்து நின்றது என்றும் போஸ்ட்மார்ட்டம் டேபிளில் அது கூடாரம்போல தெரிந்தது என்றும் எழுதியிருந்தீர்கள். அதை வாசித்து கலங்கினேன். அதே சித்திரம்தான் இங்கேயும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மனம் கலங்கிவிட்டது. நீங்கள் பூரிசிரவஸின் கதாபாத்திரத்தில் விளையாட்டுத்தோழனாகிய ராதாகிருஷ்ணனை எழுதியிருப்பிர்கள் என நினைத்துக்கொண்டேன்

செல்வன் மகாலிங்கம்