Monday, March 18, 2019

துரோணரின் உள்ளம்



Just remembering below words of Drona. It is very sad that he has to live the life which he feared when he was young.

கண்ணீர் வழியும் முகத்தைத் தூக்கி துரோணன் கேட்டான் “என்னுள்ளும் அத்தகைய வஞ்சம் குடியேறுமா என்ன? அனலை கருக்கொண்ட கந்தகமலையாக நானும் ஆவேனா? என் காயத்ரி எனக்குள்ளேயே கருகிப்போவதுதான் அதைவெல்லும் ஒரே வழியா?”

சரத்வான் அவன் முகத்தின் மெல்லிய தாடியில் படர்ந்திருந்த கண்ணீரை நோக்கிக்கொண்டிருந்தார். “சொல்லுங்கள் உத்தமரே, அப்படியென்றால் என் வாழ்வுக்கு என்னபொருள்? நான் கற்ற தனுர்வேதம் அந்த வஞ்சத்துக்குத்தான் கருவியாகுமென்றால் இக்கணமே வில்பயின்ற என் தோள்களை அரிந்து வீழ்த்துவதல்லவா நான் செய்யவேண்டியது?” தலையை அசைத்தபடி “இல்லை, நான் ஷத்ரியனாக வாழப்போவதில்லை. வைதிகனாக வாழமுடியவில்லை என்றால் மலையேறிச்செல்கிறேன். கைலாயம் சென்று அங்கே பனியடுக்குகளில் உறைந்து மாய்கிறேன். என்னுள் எரியும் அழலை ஆதிசிவன் சூடிய பனிமலைகளாவது குளிர்விக்குமா என்று பார்க்கிறேன்.”

Just thinking Arjuna's secret last arrow is something related to Dhanur Rishi Sarathwan or his Gurukulam which Drona is not aware of.

சரத்வான் கனகனும் காஞ்சனனும் இருபக்கமும் வர வெளியே வந்தபோது அவர்கள் கைகூப்பினர். கரிய உடலில் நெருப்பு சுற்றிக்கொண்டதுபோல புலித்தோல் ஆடை அணிந்து ஒளிவிடும் செந்நிற வைரக்கல்லால் ஆன குண்டலங்கள் அசைய, கரியகுழல் தோளில் புரள, அவர் நாணேற்றிய வில் என நடந்துவந்தார். “மிக இளையவர்…” என்று பின்னால் ஒரு பிரம்மசாரி முணுமுணுத்தான். “முதியவர்தான், ஆனால் முதுமையை வென்றிருக்கிறார்” என இன்னொருவன் சொன்னான். குந்தி அவர் கண்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவை இரு கருவைரங்கள் போலிருந்தன. திரும்புகையில் அவற்றில் வான்நீலம் கலந்து மின்னியதுபோலிருந்தது.

மாண்டூக்யர் முகமன் கூறி வணங்குவதையும் மூன்று கௌதமர்களும் அவரை வணங்கி வாழ்த்துபெறுவதையும் அவள் கனவு என நோக்கிக்கொண்டிருந்தாள். பாண்டுவும் பிற மாணவர்களும் வணங்கினர். பாண்டு அவளை நோக்கி ஏதோ சொன்னான். அவள் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். மாத்ரியின் கைகளைப்பற்றியபடி சென்று அவரை வணங்கினாள். சரத்வான் இரு மைந்தர்களையும் வாழ்த்தினார். சுருக்கமான சொற்களில் அவர்களை வரவேற்று அங்கு தங்கலாமென்று சொன்னார். அவள் அவரது ஆழமான குரலின் கார்வையை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தாள். அந்தக் கருவைர விழிகள் குரலாக மாறுமென்றால் அப்படித்தான் ஒலிக்கமுடியும்.



Thanks

ராகவ்