Saturday, March 9, 2019

நாகம்



ஜெ

சாதாரணமாக வந்துசென்றாலும் கடோத்கஜன் இளஞ்சிறுவனாக பாம்பைக்கண்டு அஞ்சுவதும் தந்தை விளையாட்டாக அந்தத் தளிரை எடுத்து வீசியதும் அவன் அலறி வலிப்பு வருவதும் ஆழமான ஒரு மனக்கொந்தளிப்பை உருவாக்கியது. முன்பு பிரயாகையிலேயே அவனுடைய குடிக்கே பாம்புகளுடன் உள்ள பயம் சொல்லப்பட்டிருந்தது . அவர்கள் குரங்குகள் போல. குரங்குகளுக்கு பாம்புதான் பெரிய எதிரி. ஆனால் இவை அனைத்தும் சரியாக நாகபாசத்தில் வந்து இணைகின்றன. நாக அம்பு பட்டு சாகவிருக்கும் குழந்தையின் வலிப்பாகவே அந்த நிகழ்ச்சியைப்பார்க்கமுடிகிறது

ராமச்சந்திரன்