Wednesday, March 27, 2019

துரோணர்




அன்புள்ள ஜெ

கார்கடலின் தொடக்கத்தில் கர்ணன் நுழையும்போது துரோணர் இந்நாவலில் சிறிய கதாபாத்திரமாக ஆக்கப்படுவார் என நினைத்தேன். ஆனால் அவருடைய கிரே ஏரியா தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு அவர் மிகச்சிக்கலான பெரிய கதாபாத்திரமாக ஆகிவிட்டார். பொதுவாக கிளாஸிக் உத்தி என்பது கதாபாத்திரத்த்தின் நன்மை அல்லது தீமையை மிகைப்படுத்தி பெரும் வடிவம் கொள்ள வைப்பது. கிரே ஏரியாவால் பெரிய வடிவம் அடைந்த கதாபாத்திரம் என்றால் துரோணர்தான். அவருக்குள் என்னென்ன நிகழ்கிறது என்பதை முழுசாக புரிந்துகொள்ளவே முடியவில்லை


ராஜ்