Tuesday, March 5, 2019

நஞ்சு




ஜெ

களத்தில் வசைபாடுவதைப் பற்றிய கடிதங்களைக் கண்டேன். அதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது ஒவ்வொருவருக்கும் இன்னொருவரை கடுமையாக வசைபாடுவதற்குரிய வரிகள் முன்னாடியே மனதில் இருந்தன என்பதுதான். எல்லாரும் மற்றவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். தேவையானவற்றை தெரியாமலேயே எடுத்து உள்ளே சேமித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பம் வந்தால் அந்த நஞ்சை உமிழ்கிறார்கள். அத்தனைபேருக்கும் அப்படி ஒரு ரகசிய நஞ்சுப்பை இருக்கிறது. இது மனிதர்களின் அடிப்படை இயல்பு

ராஜசேகர்