Sunday, March 31, 2019

கார்கடலின் மையம்



அன்புள்ள ஜெ

நலம்தானே? கார்கடல்தான் இதுவரை வந்த நாவல்களில் என்னால் தொகுத்துக்கொள்ள முடியாத நாவலாக இருக்கிறது. இதன் கட்டமைப்பை என்னால் இன்னும் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. கதையோட்டம் இருக்கிறது. ஆனால் மற்ற எல்லா நாவல்களிலும் ஒரு மையக்கரு இருக்கும். இந்நாவலில் அது என்ன? தந்தை மகன், ஆசிரியர் மாணவன் என்ற முரண்பாடு இருக்கிறது. ஆனால் அதற்கு அடியில் ஒரு தீம் ஓடிக்கொண்டிருக்கும். அதை தொட்டு அறிய முடியவில்லை. யாராவது எழுதினால் நல்லது என நினைக்கிறேன்

சம்பத்குமார்