Monday, June 10, 2019

எதையும் பெறாதவன்




அன்புள்ள ஜெ

மகாபாரதத்தில் கர்ணன் ஒரு கொடையைப் பெறுகிறான். இரண்டுகொடைகளை கேட்கிறான். ஒன்றைப் பெறுகிறான். ஒன்று மறுக்கப்படுகிறது. துரியோதனன் அவனுக்கு அங்கநாட்டை அளித்ததுபெரிய கொடை. அந்த செஞ்சோற்றுக் கடனுக்காகவே அவன் குந்தியிடம் துரியோதனனை விட்டுக்கொடுக்கவில்லை. அவன் குந்தியிடம் தன்னை அவள் மகன் என சொல்லவேண்டும் என்று கோருகிறான். அவள் அவன் செத்தபின் அதை செய்கிறாள். அர்ஜுனனிடம் அவன் தேர்ச்சக்கரத்தை தூக்கும்வரை பொழுது கோருகிறான். அதை அவன் அளிப்பதில்லை.

வெண்முரசில் அவன் துரியோதனனிடம் பெற்றது கொடை அல்ல என்று வருகிறது, அதைவிடப் பெரிய ஒன்றை அவன் துரியோதனனுக்கு அளித்திருக்கிறான். குந்தியிடமும் அர்ஜுனனிடம் அவன் எதையுமே கோரவில்லை என வென்முரசு சொல்கிறது. அவன் இங்கிருந்து எதையுமே பெற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் வெண்முரசின் கற்பனை. அது அவனை ஒரு தேவன் போல ஆக்கிவிடுகிறது

டி.ஜெயக்குமார்