Tuesday, June 18, 2019

கர்ணனும் துரியனும்



அன்புள்ள ஜெ

வெண்முரசு இருட்கனி வழக்கமான ஒத்திசைவுடன் முடிந்தது. உண்மையில் இந்நாவல் எங்கும் திசைதிரும்பவே இல்லை. ஒன்றுடன் ஒன்று எல்லா பகுதிகளும் இணைந்துகொண்டே வந்தன. கர்ணனின் இறப்பு முன்னரே வந்துவிட்டதனால் களநிகழ்வுகளில் திரில் அம்சம் இல்லை. ஆனால் நாவல் முழுக்க ஒரு சோகம் ஓடிக்கொண்டே இருந்தது. அனைத்தையும் கொடுத்தவன் தன் ஆசிரியனுக்கும் கொடுத்துவிட்டு மடிவது ஒரு ஆழமான டிவிஸ்ட் என நினைக்கிறேன். கதையின் எல்லா அடுக்குகளையும் இனிமேல் பேசிப்பேசித்தான் விருத்தியடையச்செய்யவேண்டும். இப்போது கர்ணனின் சடலத்தைப் பார்த்தபடியே நின்றிருக்கும் துரியோதனன்தான் நினைவுக்கு வருகிறான்

சுந்தரேஷ்