Sunday, June 16, 2019

எரி ஏறுதல்



ஜெ

ஒரு வாசகர் எழுதியிருந்தார், சகுனி கர்ணனை அவமதிப்பதற்காக விருஷாலியை சிதை ஏறக்கூடாது என்று சொன்னார் என்று. அது சரி என எனக்குப்படவில்லை. விருஷாலி சூதப்பெண் என சகுனிக்குத்தெரியும். ஆனால் கர்ணன் ஷத்ரியன் என்று நன்றகாவே தெரிந்திருக்கிறார். அது இனி நிறுவப்படும் என்றும் அவருக்குத்தெரியாமல் இல்லை. அதாவது இப்போது ஒரு ஷத்ரியனுடன் ஒரு சூதப்பெண் எப்படிச் சிதையேறலாம் என்றுதான் அவர் கேட்கிறார். அவருடைய அடிப்படையே அந்தச் சாதியுணர்ச்சிதான். அதை அவர் கேட்பது இயல்பானதுதான்


மகேஷ்