Saturday, June 15, 2019

சிதைவரை



ஜெ

விருஷாலி அத்தியாயம் ஒரு பெரிய கொந்தளிப்பை உருவாக்கியது. கர்ணனின் மீது அவனுடைய குலத்தைப்பற்றிய இழிவை ஷத்ரியர்கள் கடைசிவரைக் கைவிடவே இல்லை. சகுனி ஷத்ரியர் குரலாகவே ஒலிக்கிறார். கர்ணன் இறந்துவிட்டதனால் அந்த இழிவை விருஷாலி மீது சுமத்தி அவர்கள் தங்கள் காழ்ப்பைக் காட்டுகிறார்கள்.

அணிகள் நிறைந்து கிடக்கும் கர்ணன் அவர்களுக்குப் பெரிய ஒரு மனக்கொந்தளிப்பைத்தான் அளிக்கிறான். அவனை அவர்கள் ஏற்பதற்குச் சம்மதம் என்று அர்த்தம் அல்ல. அப்போது ஒன்றும் செய்யமுடியாது, ஏற்றுத்தான் ஆகவேண்டும். பின்னர் அவனை சிறுமை செய்வார்கள். அல்லது தங்களவராக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அப்போது அந்த வஞ்சத்தைக் காட்டுவது விருஷாலியிடம்தான்.

கடைசிவரை கர்ணனை அந்த இழிவு விடவில்லை. செத்தபின்னரும் சிதை வரை தொடர்ந்து வருகிறது. அத்தனை புகழ்மொழிகள் ஒலித்தபின்னர் கடைசியாக அதுதான் கேட்கிறது

மகாதேவன்.