Monday, June 10, 2019

குருதிமகள்கள்


ஜெ

போர்க்களத்தில் பெண்கள் எவருமில்லை. இதுவரை பெண்ணாக வந்தவள் மூதேவி மட்டுமே. ஆனால் பெண் ஒருத்தி இருந்துகொண்டிருக்கிறாள். அவள்தான் அத்தனை ரத்தத்தையும் குடிக்கிறாள்

ஆயிரம் தலைகொண்டவள். பல்லாயிரம் கைகொண்டவள். உடலெங்கும் முலைகள் கனிந்து செறிந்தவள். அவள் புவிமகள். அவளை இங்ஙனம் கண்டதில்லை. அளிபெருகும் இன்விழிகொண்டவள் அல்லவா? குருதிவிடாய்கொண்ட நாவு அவளுக்கும் உண்டா? இங்கு அனைவருடனும் போரிட்டுக்கொண்டிருந்தவள் அவள்தானா? அனைவரும் போரிட்டது அவளுடன்தானா? அனைவரும் சென்றுவிழுந்தது அவள் மீதா? 

என்றவரி அத்தனை பெண்களையும் துர்க்கைகளாக காட்டுகிறது. எல்லாருமே ரத்தத்தை விரும்பி உண்கிறார்கள். போருக்காக ஆண்களை பெற்று அனுப்பிக்கொண்டே இருக்கிரார்கள்

சாரங்கன்