Monday, June 17, 2019

சூரியனின் கண்கள்




ஜெ

நேற்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். கர்ணன் போரில் விழும் கடைசிக்காட்சியை சொல்பவர் கண் இல்லாத சூதர். அப்படி ஏன் வந்தது என்று கேட்டேன். சூரியனின் மகன். எல்லாவற்றையும் சூரியனுடன் இணைத்தே கற்பனைசெய்திருக்கிறது. சூரியனின் உக்கிரமான உச்சகட்டத்தை கண்ணால் பார்க்கமுடியாது. கண்ணால் பார்த்தால் குருடாகிவிடுவோம். கருத்தால்தான் உணரமுடியும். ஆகவே கண்ணில்லாதவர் சொல்கிறார் என்றேன். சூரியனின் மகிமையை உணர கண் ஒரு தொடக்கம்தான். ஆதித்யனை நாம் கருத்தால்தான் முழுசாக உணரமுடியும் என்று சொன்னேன். அதோடு அந்தச் சூதர் கற்பனையில் சொன்னதனால்தான் அந்தப்போர்களக் காட்சி அத்தனைப் பிரம்மாண்டமாக இருக்கிறது. அவ்வளவு மேஜிக்கலாக அமையமுடிகிறது

ராமச்சந்திரன்