Tuesday, June 25, 2019

அறச்சீற்றம்


ஜெ

அறப்பிழையால் நிலை நிறுத்தப்படுவதா உன் வேதம்?” என்றான் அஸ்வத்தாமன், “உன் குலத்திற்கு இழைக்கப்பட்ட சிறுமையை பிறருக்கு சிறுமையிழைத்தா நீ நிகர்செய்வாய்?  என்று அஸ்வத்தாமன் கேட்கும் இடம் முக்கியமானது. இந்த போர்க்களத்தில் இதுவரை எந்த அறப்பிழையும் செய்யாத மாவீரர் அவர்தான். அவர் கேட்கும் இந்த இரண்டு கேள்விகள் மிகமிகச் சுருக்கமாக இருந்தாலும் பாண்டவர் தரப்பினரின் எல்லா நியாயங்களையும் அடித்து நொறுக்கிவிடுகின்றன. பதிலே இல்லை. அஸ்வத்தாமனின் கடைசிநாள் சீற்றத்தின் அடிப்படை இந்த இரு வரிகளில் உள்ளது

மகேஷ்