Friday, April 22, 2016

ராஜசூயத்தின் அரசியல்



ஜெ

ராஜசூய யாகம் துரியோதனனின் பொறாமையைத் தூண்டிவிட்டது என்று எளிமையாகத்தான் கதைகளில் வாசித்திருக்கிறேன். அதற்கு இத்தனை அரசியல் உள்ளர்த்தங்கள் உண்டு என்பது இப்போது யோசிக்கும்போது புரிகிறது

உண்மையில் மகாபாரதத்தைப் புரிந்துகொள்ள மிகப்பெரியதடை என்பது அதை குழந்தைக்கதைகளாகவும் டிவி சீரியலாகவும் பார்ப்பதுதான். மகாபாரதத்திலே இப்படி இல்லை என்று என்னிடம் சில நண்பர்கள் வாதிடுவார்கள். அவர்களெல்லாம் டிவி சீரியலைத்தான் சொல்கிறார்கள்

ராஜசூயம் செய்வதன் உள்ளர்த்தம் புரிந்தால் இந்த அரசியலை எளிதில் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் அதைக்கூட இப்படி படித்தால்தான் புரிந்துகொள்ளமுடிகிறது

வாஸன்