Tuesday, August 2, 2016

முள்ளும் நஞ்சும்





ஜெ

இன்றைய வெண்முரசில் காத்யாயனர் சொல்லும் ஓர் இடம் முக்கியமானது. அதை நான் சற்று பிந்தி இரண்டாம்முறைதான் வாசித்து அறிந்தேன். அதாவது என்றாவது வைதிகமரபும் சார்வாக மரபும் சந்திக்கமுடியும். ஏனென்றால் வேறுபாடுகள் மேலோட்டமானவை, ஆழத்தில் வேறுபாடு குறைவு. ஆனால் வேதாந்தமரபு வேதமரபை விட்டுப்பிரிந்துதான் சென்றுகொண்டிருக்கும். இணையவே முடியாது. விவேகானந்தர் வரை அதைப் பார்க்கமுடிகிறது. வேதங்களைப்பற்றி சுவாமிஜியின் கருத்துக்களை இந்தக்கோணத்தில் வாசிக்கவேண்டுமென நினைத்துக்கொண்டேன்



சாரதா