Wednesday, February 1, 2017

சலிப்பிக்குப்பின் வரும் குதூகலம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

 
 
வணக்கம்.

என்றுமே சலிப்பிக்குப்பின் வரும் குதூகலம் இரட்டிப்பு மகிழ்வைத்தரும்.தருமனின் விரக்தியான சிந்தனை மற்றும் சொல்லாடலுக்குப்பின்,களக்காட்சி சற்றும் எதிர்பாராதவகையில் தலைகீழாக மாறிவிட்டது!.குரங்குகள் புலியுடன் சேர்ந்து அடிக்கும் கொட்டம் திகட்டாத இனிமையாக இருந்தது.அதுவும் ஒரு குரங்கு குட்டி எங்கே அந்த புலியிடம் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்று உயிர் போகும் பீதியில் பயந்து பிறகு அதிலிருந்து பீமனால் விடுபட்டபின் அடிக்கும் லூட்டி!! என்னவொரு அற்புதமான துவக்கம்!.  

நேற்று கூட ஒரு வாசகருக்கு எழுதிய கடிதத்தில்  'கிராதத்தில் இருந்து இன்னும் விடுபடவில்லை என்று எழுதியிருந்தீர்கள்,ஆனால் அதற்குள்  ''மாமலரில்'' ஒரு உற்சாகமான துவக்கத்தை தந்துவிட்டீர்களே!.உண்மையில் அற்புதமான சொற்களும் மூகாம்பிகையின் அருளும் ஒருசேர உங்களுக்கு கைவரபெற்றதாகவே எனக்குத்தோன்றுகிறது.  

அன்புடன்,
அ .சேஷகிரி.