Friday, February 3, 2017

மாற்றம்



ஜெ

மாமலரில் எல்லாரும் மாறியிருக்கிறார்கள். ஞானம் தேடிச்சென்று உருகி மாறிப்பிறந்து வந்த தர்மர் வேறுமாதிரி இருக்கீரார். அந்த ஞானமே ஒரு சலிப்பாக ஆகிவிட்டிருக்கிறது. தான் வெறுமொரு அண்ணன் மட்டுமே என அவர் உணர்வது அழகான இடம்.

அதேபோல உக்கிரமான திரௌபதி தணிந்து குலமகள் போல இருக்கிறாள். சமையல் செய்து கணவர்களுக்கு அளித்து அவர்களின் அதட்டல்களுக்கு பொய்யாகப் பணிந்து அழகான குடும்பப்பெண்ணாக இருக்கிறாள். பீமன் அவருடைய கசப்பெல்லாம் போய் சின்னப்பையனாக ஆகிவிட்டிருக்கிறார்.

வனவாசம் அவர்களை மாற்றிவிட்டிருக்கிரது இல்லையா?

சுவாமி