Thursday, February 23, 2017

சிதை



ஜெ

தாயக்கட்டை திரும்பிக்கொண்டே இருப்பது போல புரூரவஸின் குணாதிசயம் மாறிக்கொண்டே இருப்பதை வாசித்து தொடர்ச்சியாக மனக்கொந்தளிப்பை அடைந்துகொண்டே இருக்கிறேன். பிரிவின் துன்பத்தை  நானும் அறிந்திருக்கிறேன். அதுவும் ஒருவகைச் சாவுதான் என்றுதான் சொல்வேன். சிதைவரைக்க்கும் சென்று புரூரவஸ் மீண்டு வருவதை வாசித்தபோது என் கண்ணில் நீர் வழிந்துகொண்டே இருந்தது. நான் அடைந்த அனுபவங்கள் ஓரளவுக்கு அதற்குச் சமானமானவைதான். நான் வாழ்க்கையை வாழவேண்டும் என முடிவெடுத்து சிதையில் இருந்து எந்திருச்சு வந்தேன்

செண்பகமூர்த்தி