Thursday, August 4, 2016

சகதேவன்






ஜெ

இன்றைய சொல்வளர்காட்டில் படை கொண்டுசென்று அஸ்தினபுரியை கைப்பற்றுவதைப்பற்றி பீமனும் தம்பியரும் ஒருவருக்கொருவர் பெசிக்கொண்டிருக்கும் இடம், அந்தக்குளம் எல்லாம் அழகாக இருந்தன. 

ஒவ்வொருவர் பேசும்போதும் சரியாகத்தானே சொல்கிறார்கள் என தோன்றியது. நடைமுறையில் என்னென்ன சிக்கல் இருக்கின்றன என்றுதான் சொல்கிறார்கள். எல்லாமே பொருத்தமாகவும் இருக்கின்றன


அதைக்கடந்து தருமன் போகவேண்டாம் என முடிவுசெய்ய என்ன சொல்வார்கள் என நினைத்தேன். ஒரு ஐடியலை முன்வைத்து ஏதேனும் சொல்வார்கள் என நினைத்தேன். ஆனால் சகதேவன் மிகச்சரியான இன்னொரு நடைமுறை காரணத்தைத்தான் சொல்கிறான்


சகதேவன் ஜோதிடன். அவன் எப்போதுமெ அப்படித்தான் சொல்கிறான். ஜோதிடர்கள் பொதுவாக அதீதமான காமன்சென்ஸுடன் இருப்பதை நான் நிறையப்பார்த்துகிருக்கிறேன்

மனோகர்