Saturday, October 14, 2017

ழுதழல் - புராண உருவாக்கம்



இன்றைய பகுதியில் பாணாசுரருக்கும்இளைய யாதவருக்குமான குகையில் நடக்கும் காட்சிகள் புராணங்கள்உருவாகும் விதத்திற்கு சரியான உதாரணம்இந்த நிகழ்வில் நிச்சயம் கிருஷ்ணனுக்கும்பாணருக்கும் இடையே ஒருநீண்ட உரையாடல் நிகழ்ந்திருக்கவே செய்யும்அது என்னவாக இருந்திருக்கக் கூடும்பன்னிரு படைக்களத்தில்ஜராசந்தனுக்கும்இளைய யாதவருக்கும் இடையே நிகழ்ந்த விரிவான உரையாடல் போல இருந்திருக்கும்அது நாகவேதம்இது அசுர வேதம்அதே போன்ற ஒன்றை மீண்டும் எழுதி இருக்கலாம்ஆயினும் அதே உரையாடலை அதேவீரியத்துடன் கிருஷ்ணனை தன் மூதாதையர்களில் ஒருவராக பாணர் அறிகிரார் என இரண்டே வரியில்முடிக்கையில் தான் புராணம் என்பதன் வீச்சும் வீரியமும் புரிகிறது

உண்மையில் கிருஷ்ணன் தன் நாராயண வேதமாக முன் வைப்பது புதிய ஒன்றை அல்லமாறாக முன்பே இருக்கும்வேதங்களின் அனைத்துயிருக்கும் பொதுவானசாரமான ஒன்றைஅதை அவன் அவ்வேதங்களில் இருந்தேஎடுத்திருக்க முடியும்இன்று நாம் வந்தடைந்துள்ள சிந்தனைகள் அனைத்திற்கும் ஊற்று ஆதி மானுடத்திலேயேஇருந்திருக்கும்மிகச் சிறந்த உதாரணம் - யாதும் ஊரேநிலம் என்பதன் எல்லைகள் வகுக்கப் படாத காலத்திலேயேகாரி டேவிசுக்கு முன்னெட்டு கொடுத்த கனவு இருந்திருக்கிறதுஎனவே கிருஷ்ணன் கண்டடைந்தவை அனைத்தும்ஆதி வேதமான பாசுபதம் துவங்கி ஆசுர வேதம்நாக வேதம்வாருணம்மாகேந்திரம் வழியாக நால் வேதமாகிநின்றிருக்கும் வேதங்களில் இருப்பவையேதன்னுள் ஆழ்ந்துஊழ்கமும் பயணமும் இணைந்து அவர் அடைந்தவைஏதேனும் ஒரு மூதாதை கண்டறிந்து சொன்னவற்றின் நீட்சியேஒவ்வொரு குலத்திலும் அத்தகைய ஒருவர் பொதுப்போக்குக்கு எதிரான குரலாக ஒலித்திருப்பார்இத்தனை காலம் கடந்து வந்தும் அவரது குரல் கேட்பதாலேயேஅக்கருத்து நிலைபெற்றதாகவும்வென்றதாகவும் இருக்கும்எனவே அவர் அக்குலத்தோரால் நினைவு கூரப்படும்ஒருவராகவே இருப்பார்வென்றவராகவெறுக்கப் படுபவராக!! அப்படி மகாபலியை மண்ணுக்குள் ஆழ்த்தியவாமனராக கிருஷ்ணனைக் கண்டிருப்பார் பாணர்

ஆசுர வேதமென்னும் யானையைக் கட்டுப்படுத்தும் அம்பாரியாகவேதங்களின் அந்தமான வேதாந்தமாக நாரயணவேதம் யுகம் தோறும் எழ முயன்று கொண்டிருப்பதையும்அது எப்போதும் வென்றெ வந்திருப்பதையும் அவர்உணர்ந்திருப்பார்இவையனைத்திற்கும் மேல் அவரை அசுர வேதத்தை விட வைத்த ஒன்று உண்டுஅது அவரதுமகள் உஷையின் பிரேமைஉஷை அனிருத்தன் மீது கொண்டதைக் காதல் எனக் குறுக்கி விட முடியாதுஅவளுடையது பர்ஸானபுரியின் ராதைக்கிணையான பிரேமைஎனவே தான் அவள் அனிருத்தனை தன் அகஆழத்தில் இருந்து எடுக்கிறாள்நீலத்தின் ராதை போலஅவளது பிரேமை பாணருக்கு ஒன்றைத்தெளிவுபடுத்தியிருக்கும்அவர் எத்தனை கட்டுகள்அரண்கள் இட்டாலும் புதிய வேதத்தைத் தடுக்க இயலாதுஎன்பதைஅவர் மனம் உவந்து தான் நாராயண வேதத்தை ஏற்கிறார்இந்திரன் ஃபால்குணையால் ஏற்றதைப் போலஇதனாலேயெ உஷாபரிணயம் மிக விரிவாகஒரு குறு நீலமாக மலர்ந்திருக்கிறது