Thursday, October 19, 2017

தீப ஒளித்திருநாள்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்.  கண்ணன் என்றும் உங்களோடு.  வெண்முரசின் ஓசைக்கு தங்கள் உள்நின்று ஒலிக்கும் பேரருள் பெரும் கங்கை வெள்ளம் எனப் பெருகும் இக்காலத்தே என் பள்ளங்களையும் நிறைக்க வேண்டும் எம் சிவபெருமானை வேண்டுகிறேன்.  நல்லனவெல்லாம் உமக்கு அவன் அருள உம் சொற்களென அருளின் கொடை எனக்கும் அருளக் கோருகிறேன்.  தங்கள் படைப்புகள் சில படித்திருந்த போதும் பலவும் படிக்கக் கருதி இருந்தபோதும் வெண்முரசம் ஒன்றும் மட்டும் இத்தனை பிடிக்கிறதே ! யானொன்றும் அறிகிலேன் ! 

வாழ்க நீ எம்மான் !  நின்னோர் அனைவரும் வாழ்க ! நின்பால் அன்புற்றோர் வாழ்க ! நின் பகைவரும் நின் புகழ் வளருமாறு வாழ்க ! ஈசனை வாழ்த்துங்கால் அது நமக்கொரு வாழ்த்து என்பதுபோல் உங்களை வாழ்த்துங்கால் அது எனக்கொரு வாழ்த்து 

வெண்முரசம் எனும் இத்தவம் நிகழும் இக்கணத்தில் நானும் ஓர் வாசகன் என் பெருமை. 


அன்புடன்
விக்ரம்
கோவை