Wednesday, October 18, 2017

மாமலர்



யயாதியை ஒரு பொருட்டெனவே மதிக்காதவள் தேவயானி. ஆனால் அவனால் ஏமாற்றப்பட்ட பொழுது, அவனைக் கசனாகவே பார்க்கிறாள். அவள் கனவில் கண்டதும் அதுவே. அவள் இந்த அளவிற்கு வெறுக்குமாறு அவன் என்ன தவறு செய்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இத்தனைக்கும், திரௌபதியுடனான முதலிரவுக்கு முன்னர் அர்ஜுனன் திரௌபதியின் அணுக்கத்தோழியுடன் மகிழ்ந்த நினைவு எனக்கு வந்தது. அதை ஒப்பிடுகையில் யயாதி பாவம். பாவப்பட்ட உணர்வுப் புழு மட்டுமே.

பாண்டியன் ராமையா குறிப்பு