Thursday, August 4, 2016

வஞ்சம்







ஜெமோ

இன்று பாஞ்சாலியின் குணாதிசயத்தில் இதுவரை இல்லாத ஒரு முகம் வெளிப்படுவதைக் கண்டேன். அவளுடைய குணச்சித்திரத்திற்கு அது நம்பும்படித்தான் உள்ளது என்றாலும் அதிசயமானது. அவள் அரசி. சின்னத்தனம் இல்லாதவள். ஆனால் இப்போது சிறுமைகொண்டிருகிறாள். ஏனென்றால் வஞ்சம் அவளுடைய எல்லா நல்லியல்புகளையும் இல்லாமலாக்கிவிட்டது என நினைக்கிறேன்.

அவள் தருமனின் மனதை அத்தனை நுட்பமாக புரிந்து வைத்திருக்கிறாள். எங்கே அடித்தால் வலிக்கும் என்று அவளுக்கு தெரிந்திருக்கிறது. அவளுடைய அந்த ஆங்காரம் அச்சத்தை உருவாக்கியது. ரத்தம் பார்க்காமல் அவள் அடங்கமாட்டாள் என தோன்றிவிட்டது

சண்முகம்