Saturday, August 6, 2016

ஐவரின் உள்ளம்





ஜெ,

திரௌபதியின் குணச்சித்திரத்தைப்பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அவள் அரசி. ஆனால் அவமதிக்கப்பட்டதும் மனதில் அவ்வளவு நஞ்சு நிறைந்துவிட்டது. அவள் தன் கணவர்களை அப்படி சூட்சுமமாக புரிந்துவைத்திருக்கிறாள். எங்கே எப்படி அடிக்கவேண்டும் என நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறாள்.

தருமனை அவன் பாண்டுவின் மகன் அல்ல என்கிறாள். பீமனை அவன் கர்ணனுக்குப் பயப்படுவான் என்று பார்த்துவைத்து அதைச் சொல்கிறாள். அர்ஜுனனிடம் அவனுடைய காமத்தின் உள்ளர்த்தத்தைச் சொல்கிறாள்.

அத்தனைபேரையும் அவள் ஐந்து விரல்மாதிரி வைத்திருக்கிறாள். அவள் நினைத்தா ஐந்துபேரையும் உடைத்து வீசிவிடமுடியும்

சாரங்கன்