Wednesday, May 18, 2016

வெண்முரசில் காமமும் வஞ்சமும்

வெண்முரசில் காமமும் வஞ்சமும்

மகா நாராயண உபநிஷித்தில் பாகம் 61 மற்றும் 62 யில் வரும் அழகான மந்திரம் இது. உபகர்மாக்களில் ஒன்றாக வருவது. இங்கு “காமம்” ‘Lust” என்ற அர்த்தத்தில் மட்டும் வருவது இல்லை “Desire” என்ற பொருளில் வருகிறது. “மன்யு” என்றால் “கோபம்”. ““காமோ காரிஷீத்” – ‘இந்த செயல்கள் விழைவினால் /ஆசையினால் செய்யபட்டவை”. “மன்யுக காரிஷீத்” – ‘இந்த செயல்கள் கோபத்தினால் செய்யபட்டவை”. இவை “பாவ மன்னிப்பு” கோரிக்கைகள் அல்ல மாறாக “பாவம் ஏன் செய்யப்பட்டது” என்பதை தன்னளவில் ஆராய தூண்டும் வரிகள்.