Thursday, June 30, 2016

பெண்களின் தருணம்

 
 
அன்புள்ள ஜெ

நிஜமாகவே பயந்து கொண்டிருந்தேன்.

இந்த தருணத்தை எப்படி நீங்கள் வடிக்கப் போகின்றீர்கள் என்று?

நான் எதிர்பார்த்த உக்ரகம் இல்லை.

ஆனாலும் மனது வலித்தது வழக்கம் போல இந்தத் தருணத்தை படிக்கும் போதெல்லாம்
ஏற்படுவது போல.

“அன்பினால் ஆற்றலிழக்கிறாள்”

இதை எதை வைத்து எழுதினீர்கள் என்று எனக்குத் தெரியாது.

ஆனால் ஒரு வரியில் சொல்லப் பட்ட உச்சக் கட்ட உணர்வை ப்ரதிபலிக்கும் வரிகள் அவை.

இந்த உண்மை ( ஆமாம்) இந்த உலகில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்
கணக்கான பெண்களின் நிலை இது.

கோவிந்தன் ஆடை கொடுத்து மானம் காத்தான் என்பதே நான் அறிந்தது.

உங்கள் கோணம் அற்புதம்.

த்ரெளபதிக்கு ஆறுதல் அளித்த அத்தனை பெண்களுக்கும் கோடி கோடி நமஸ்காரம்.

வாழ்க பல்லாண்டு.

அன்புடன்
மாலா