Wednesday, April 29, 2015

உறவும் பிரிவும்



அன்புள்ள ஜெ

இன்று துரியோதனனும் தருமனும் சந்திக்கும் காட்சி கண்களிலே நீர் வரவழைத்தது. அது வாழ்க்கையில் அன்றாடம் நாம் காணும் காட்சிதான். அந்த மாதிரியான காட்சிகள் நம் வாழ்க்கையில் நமக்கு எப்போதுமே காணக்கிடைக்கும் சாதாரணமான மனிதனின் சில்லறைத்தனங்களை எல்லாம் கடந்துசெல்லுவதற்கு உறுதுணையாக அமைகின்றன இல்லையா? அதனால்தான் அந்தக் கண்னீர் .அது நமக்கு வாழ்க்கையைப்பற்றிய நம்பிக்கையை மீட்டுத்தருகிறது. நம்மை ஒரு மீண்டும் தெய்வத்திலும் அறநெறிகளிலும் நம்பிக்கைக்கொண்டவர்களாக ஆக்குகிறது. ஒரு குளியல் போல

அந்தமாற்றம் துரியோதனனுக்கு வந்தது குற்றவுணர்ச்சியால்தான். கூடவே பானுமதியின் நல்லெண்ணமும் அதிலே உள்ளது. அதை ப்புரிந்துகொள்ளமுடிகிறது. உண்மையிலே இப்படி முடிந்தால்தான் அடுத்து நடப்பவற்றை விளக்க முடியும். ஏனென்றால் அதன்பிறகு பல ஆண்டுகள் இரண்டுதரப்பும் ஒழுங்காக நாடாண்டிருக்கிறார்கள். சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள்

இனிமேல்தான் சவாலே. இந்த இடத்தில் இருந்து மீண்டும் எப்படி அந்தக்குரோதம் வரைக்கும் போனார்கள் ? அப்படி என்ன ஆயிற்று?அதை எப்படி சொ ல்வீர்கள்? உங்களுக்கு நீஙக்ளே பெரிய சவாலைவிட்டுக்கொண்டிருக்கிறீகள்

சாரங்கன்