Thursday, April 30, 2015

இணையும் உள்ளங்கள்







எப்பொழுதும் சரியாக 12:05 முன்பு நான் அன்றைய வெண்முரசு பகுதியை படித்து முடித்து விடுவேன். ஆனால் இன்றைய பகுதி என்னை ஏதோ செய்கிறது.



புரிசிரவரசை போல என் கண்களும் குளமாய் மிதக்கிறது. மறுபடியும் மறுபடியும் படித்து கொண்டு இருக்கிறேன்.



எல்லாருமே இத்தனை நல்லவர்களா!!! (கர்ணன் மட்டும் missing..).. பிறகு எப்படி இந்த மாபெரும் போர் உருவாயிற்று?  இவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு  சாக போகிறார்களே என்ற பதட்டம் உருவாகிறது.. எல்லாம் தெரிந்து ஒருவன் சிரித்து கொண்டே செல்கிறானே (கண்ணன்) அவன் மீது கோபம் கோபாமாய் வருகிறது. 



சிறு கோபத்தால் பிரிந்து போன நண்பர்களை நிறைய சேர்த்து வைத்து உள்ளேன். ஒருவரை ஒருவர் பார்க்கும் வரைக்கும் தான் அத்தனை கோபமும், ஆனால் பார்த்து கொண்டால் குழுங்கி குழுங்கி அழுக ஆரம்பித்து விடுவார்கள்..



தலைக்கு மேல் வேலை இருக்கிறுது. Auditor கண் முன்னர் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு நிறைய “Schedules” தர வேண்டி இருக்கிறது. ஆனால் ஒரு மணி நேரமாக மனம் வெண்முரசை சுற்றி சுற்றியே வந்து கொண்டு இருக்கிறது. தர்மனும், துரியனும், அர்ஜுனனும், பீமனும், பரிதாபமான  புரிசவரசும் , (பாழாய் போண !!!) கண்ணனும் மாறி மாறி  கண் முன்னே வந்து கொண்டே இருக்கிறார்கள்.



கண்டிப்பாக இன்று இரவு தூங்க  நெடு நேரம் ஆகும்..



ரகுராமன்