Wednesday, April 29, 2015

பெண்களின் மனப்புண்



ஜெ

இந்த இளவரசிகள் விஜயை, தேவிகை இரண்டுபேரும் பூரிசிரவஸிடம் நடந்துகொள்ளுவதைப் பார்த்தால் அவர்கள்மீது பரிதாபம்தான் வருகிறது. அவனை அவர்கள் புண்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் புண்பட்டிருக்கிறார்கள். அவன் இளவரசியைக் கல்யாணம் செய்ய ஆசைப்பட்டு தங்களைக் கைவிட்டுவிட்டதாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால் இப்போது என்ன ஆயிற்று, நாங்கள் உனக்கு ஆணையிடும் இடத்தில் வந்து உட்காந்துவிட்டோம் இல்லையா என்று நினைக்கிறார்கள். உண்மையில் அப்படி நினைக்கவில்லை. சும்மா அப்படிச் சொல்லிக்கொண்டு அவனைப்புண்படுத்துகிறார்கள்

பூரிசிரவஸ் புண்படுகிறான். ஆனால் அதைவிடப்பெரிய விஷயங்கள் தொடர்ச்சியாக நடக்கும்போது அதையெல்லாம் சின்ன

விஷயமாக நினைத்து அடுத்தகட்டத்துக்குப் போய்விடுகிறான். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று நினைக்க ஆரம்பித்து கடந்துவிடுகிறான். பெண்கள்தான் பாவம் அதிலே இருந்து அவர்களால் ஒருநாளைக்கும் வெளியேவரவே முடியாது

சீனிவாசன்